என் பாரதிக்கு.....
துப்பாக்கியின் தோட்டாக்கள் எல்லாம்
உன் தமிழின் கூர்மையாலே
நீர்த்துத்தான் போயிற்றே......
இறுக்கி கடிய முண்டாசில்
தமிழர்களின் மனதையும் சேர்த்து
கட்டிய வீரனே!
இசைபாடி போர்தொடுத்த இசைகுயிலே
உன்பாட்டினாலே பயந்து ஓடினான்
வெள்ளையன் ஊரைவிட்டு.....
எத்தனைகோடி தவம் செய்தால்
தமிழன்னை உன்னை - தன்
தவபுதல்வனாய் பெற்றிடவே!
எத்துனை ஜென்மம் எடுப்பினும்
தமிழனாய் பிறந்திட வேண்டும்
உன் தமிழ் பருகி - என்
தாகம் தீர்த்திட வேண்டும்
உன் தமிழின் கூர்மையாலே
நீர்த்துத்தான் போயிற்றே......
இறுக்கி கடிய முண்டாசில்
தமிழர்களின் மனதையும் சேர்த்து
கட்டிய வீரனே!
இசைபாடி போர்தொடுத்த இசைகுயிலே
உன்பாட்டினாலே பயந்து ஓடினான்
வெள்ளையன் ஊரைவிட்டு.....
எத்தனைகோடி தவம் செய்தால்
தமிழன்னை உன்னை - தன்
தவபுதல்வனாய் பெற்றிடவே!
எத்துனை ஜென்மம் எடுப்பினும்
தமிழனாய் பிறந்திட வேண்டும்
உன் தமிழ் பருகி - என்
தாகம் தீர்த்திட வேண்டும்
--பிரியா