என் அன்பு மரியா....
என் அன்பு மரியா
இப்போது நீ எங்கே இருக்கிறாய் ?
குட்டியாய் மெருதுவாய்
உன் கைகளால்
என் சுண்டு விரலைப்பற்றி இருந்த நிமிடம்
திரும்ப வருமா
காலத்தோடு அதை நீ எங்கே கொண்டு சென்றாய் ?
நீ பள்ளிக்கு சென்ற
முதல் நாள்
நான் அழுதது உனக்கு தெரியுமா?
பூ கேட்டு நீ அழுத போது
நான் கொடுத்த ஒற்றை ரோஜாவை
எங்கே வைத்திருக்கிறாய் ?
என் அன்பு மரியா
இப்போது நீ எங்கே இருக்கிறாய் ?
என் மூச்சு காற்றில்
என் ஆன்மாவில்
கலந்துவிட்டாயா?
இல்லை
அனுதினமும்
மரியா மரியா மரியா
என்று உன் பெயரை
உச்சரித்துக்கொண்டிருக்கும்
என் வார்த்தைகளில்
ஒழிந்துருக்கிறாயா?
இப்போது நீ எங்கே இருக்கிறாய் ?
நீ என்னுடன் தான் இருக்கிறாய்
நான் நீயாக
நீ நானாக
ஒரு புன்னகையாக
ஒரு வாடாத மலராக
என் கண்ணீராக
என்றும் மாறாத கனவாக
நீ என்னுடன் தான் இருக்கிறாய் மரியா!!!!!!
-மகேஷ்
இப்போது நீ எங்கே இருக்கிறாய் ?
குட்டியாய் மெருதுவாய்
உன் கைகளால்
என் சுண்டு விரலைப்பற்றி இருந்த நிமிடம்
திரும்ப வருமா
காலத்தோடு அதை நீ எங்கே கொண்டு சென்றாய் ?
நீ பள்ளிக்கு சென்ற
முதல் நாள்
நான் அழுதது உனக்கு தெரியுமா?
பூ கேட்டு நீ அழுத போது
நான் கொடுத்த ஒற்றை ரோஜாவை
எங்கே வைத்திருக்கிறாய் ?
என் அன்பு மரியா
இப்போது நீ எங்கே இருக்கிறாய் ?
என் மூச்சு காற்றில்
என் ஆன்மாவில்
கலந்துவிட்டாயா?
இல்லை
அனுதினமும்
மரியா மரியா மரியா
என்று உன் பெயரை
உச்சரித்துக்கொண்டிருக்கும்
என் வார்த்தைகளில்
ஒழிந்துருக்கிறாயா?
இப்போது நீ எங்கே இருக்கிறாய் ?
நீ என்னுடன் தான் இருக்கிறாய்
நான் நீயாக
நீ நானாக
ஒரு புன்னகையாக
ஒரு வாடாத மலராக
என் கண்ணீராக
என்றும் மாறாத கனவாக
நீ என்னுடன் தான் இருக்கிறாய் மரியா!!!!!!
-மகேஷ்
என் வரையில் நான் படித்ததில் இது மிக சிறந்த படைப்பு......இதை எழுதிய மகேஷ் என் படைப்பின் மிக சிறந்த வாசகர்....... மிக சிறந்த விமர்சகர் என் எழுத்துகளை வழி நடத்தும் நல்ல தோழர்....