எனக்கான பரிசு
பிறப்போடு சேராமல்
பிறந்துவிட்ட ஓர் சொந்தம்
மறக்காமல் மலர்கிறது
மனதோடு தினம்தோறும்...!
கூடித்திரியவில்லை சேர்ந்து
கூட்டாஞ்சோறாக்கவில்லை
நாடித்துடிப்பாக என்னில்
ஓடி மகிழ்கின்றாய் அன்பில்...!
பணம்கொடுத்து சேராத
பாசப் பிணைப்புப்போல்
தினம் வந்து சுகம் கேட்க
தவமென்ன நான் செய்தேன்...!
ஒற்றை வரிக்குள்ளே
உயிர்வாழும் உறவாக
எனக்குள்ளே நீ வந்தாய்
இன்னோர் இதயமானாய்....!
தொலைவாக இருந்தாலும்
கலையாத பாசம் நீ
உயிரோடு உள்ளவரை உன்னை
உள்ளத்தில் இருத்திவைப்பேன்....!
பிறந்துவிட்ட ஓர் சொந்தம்
மறக்காமல் மலர்கிறது
மனதோடு தினம்தோறும்...!
கூடித்திரியவில்லை சேர்ந்து
கூட்டாஞ்சோறாக்கவில்லை
நாடித்துடிப்பாக என்னில்
ஓடி மகிழ்கின்றாய் அன்பில்...!
பணம்கொடுத்து சேராத
பாசப் பிணைப்புப்போல்
தினம் வந்து சுகம் கேட்க
தவமென்ன நான் செய்தேன்...!
ஒற்றை வரிக்குள்ளே
உயிர்வாழும் உறவாக
எனக்குள்ளே நீ வந்தாய்
இன்னோர் இதயமானாய்....!
தொலைவாக இருந்தாலும்
கலையாத பாசம் நீ
உயிரோடு உள்ளவரை உன்னை
உள்ளத்தில் இருத்திவைப்பேன்....!
------- சீராளன்
இந்த கவிதை என் இணைய சகோதரர் சீராளன் அண்ணா எனக்கு அளித்தது.... நான் மிகவும் ரசித்த கவிதை... கேட்டு வாங்கிய பரிசு ஆனால் மிகவும் உயரிய பரிசு... ஒரு வகையில் என் எழுத்துகளின்ஆசான் அவர்... நன்றி அண்ணா